தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? ஏற்கனவே காப்புக்காடுகளின்(Reserved Forest) எல்லையிலிருந்தே குவாரி நடத்தலாம் என உத்தரவிட்ட அடுத்த சில நாட்களிலேயே தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறையை தற்போது தளர்த்தியிருக்கிறார்கள். கடும் கண்டனத்திற்குரிய இந்த அரசாணையை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்த துறையின் அமைச்சருக்கு பயந்து இப்படி அரசாணைகளை அடுத்தடுத்து பிறப்பிக்க முதலமைச்சர் ஒப்புதல் அளிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? திரு.ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா?

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து தமிழகத்திடமிருந்த தண்ணீர் திறக்கும் உரிமையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேரளாவிற்கு தாரை வார்த்ததைப் போல இதிலும் நடந்துகொள்ளக்கூடாது. எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களைக் கொடுத்து கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சியை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.