January 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர்களின் தனிப்பெரும் விழாவாம் பொங்கல் திருநாளைக்கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமுவந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம்-ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட கண்ணங்கோட்டை திரு.செல்லையா குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதநேயத்தையும், தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் முறையையும் மக்களுக்கு எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“உற்காசமாக இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி” என அவர் அறிவுறுத்திய வழியிலேயே, மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களை மகிழ்ச்சியாக வாழவைத்திடவும், இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 11, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணல் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி கையிலேந்திய கொடிக்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகி, கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று! உயிரை விட கொண்ட கொள்கையும், தாய்மண்ணின் சுதந்திரமுமே பெரிது என நாட்டின் விடுதலைக்காக தன் இன்னுயிரைத் தந்த அந்த தியாகியின் ஒப்பிட முடியா அர்ப்பணிப்பையும், துணிவையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்.
January 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.
January 7, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது.
January 4, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off ஊடகவியலாளர், நண்பர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தை திரு.உவே ரகுநாதாசார்யா(எ) ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்கள் இயற்கை எய்தினார்என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off பெரும் வலிமையோடு இருந்த ஆங்கிலேயரை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்த இந்தியாவின் முதல் பெண் அரசி, தனது ஆற்றல் நிறைந்த போர் உத்திகளால் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அந்த வீரமங்கையின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர முழக்கமிட்டு, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றிருக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கடைசிவரை நெஞ்சுநிமிர்த்தி களத்தில் நின்ற அந்த மாவீரரின் வீரத்தைப் போற்றி வணங்குவோம்!