November 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
September 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
November 25, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கு அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவுபடுத்துகிறேன். தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கையாள்வது எப்படி ?
November 22, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
November 18, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசத்தின் மானம் காக்க ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டி, தன் சொத்து சுகங்களை இழந்து, சிறையில் வாடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்த வீரத்திருமகனின் தியாகத்தை, தேச பக்தியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
November 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும்.
November 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.
November 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விளையாட்டுத்துறையில் வழங்கப்படும், நாட்டின் மிக உயர்ந்த விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுபெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுபெறும் சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன்.பிரக்ஞானந்தா அவர்களுக்கும், இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பெருமை தேடித்தரும் இவர்கள் மூவரும் தத்தமது துறைகளில் புதிய சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறேன்.
November 14, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்…” என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம்.
November 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள்.