January 19, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைப்பட நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி.சரோஜினி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தாயை இழந்துவாடும் திரு.வடிவேலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
January 17, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் விழா. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
January 16, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுமறை என்று சொல்லத்தக்க வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய திருக்குறளைத் தந்திட்ட திருவள்ளுவரின் தினமாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம். திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக்கொள்வோம். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோரிக்கையான திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
January 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் இன்று. தலைமுறைகளை தாண்டி கொண்டாடப்படும் அந்த மாமனிதர், கட்டிய அணை இன்றும் லட்சோபலட்ச குடும்பங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. இந்த அணைக்காக தன் குடும்பத்தின் சொத்து சுகங்களை இழந்த கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் தியாகம் இனம், மதம், மொழி, நாடு எல்லைகளை தாண்டி மனித நேயத்தின் அடையாளச் சின்னமாக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
January 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர்களின் தனிப்பெரும் விழாவாம் பொங்கல் திருநாளைக்கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமுவந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம்-ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட கண்ணங்கோட்டை திரு.செல்லையா குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதநேயத்தையும், தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் முறையையும் மக்களுக்கு எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“உற்காசமாக இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி” என அவர் அறிவுறுத்திய வழியிலேயே, மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களை மகிழ்ச்சியாக வாழவைத்திடவும், இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 11, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணல் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி கையிலேந்திய கொடிக்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகி, கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று! உயிரை விட கொண்ட கொள்கையும், தாய்மண்ணின் சுதந்திரமுமே பெரிது என நாட்டின் விடுதலைக்காக தன் இன்னுயிரைத் தந்த அந்த தியாகியின் ஒப்பிட முடியா அர்ப்பணிப்பையும், துணிவையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்.
January 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.
January 7, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது.