February 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது. எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
February 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மத்திய பட்ஜெட் – 2023-24 ; வரவேற்பும், ஏமாற்றமும் !
January 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகிம்சை எனும் அறவழிப் போராட்ட வடிவம்கொண்டு, இந்தியாவிற்கு விடுதலைப் பெற்றுத்தந்த நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் இன்று! இந்நாளில், ‘அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது’ என்ற மகாத்மாவின் கொள்கையைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவர் போதித்த ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் கட்டிக்காத்திட உறுதியேற்போம்.
January 29, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 27, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு (கிழக்கு)-98 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு !
January 27, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு!
January 26, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி திருமதி.வாணி ஜெயராம், திரு.கல்யாணசுந்தரம் பிள்ளை, திரு.வடிவேல் கோபால், திரு.மாசி சடையன், திரு.பாலம் கல்யாண சுந்தரம், டாக்டர்.கோபாலஸ்வாமி வேலுசாமி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த டாக்டர். நளினி பார்த்தசாரதி ஆகியோரை பாராட்டி மகிழ்கிறேன். அவரவர் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து நம்முடைய தேசத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்.
January 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
January 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம். ‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ என்பதை மறவாமல், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.
January 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று சொல்லி தமிழர்களையும், தமிழ்நாட்டையும் உள்ளார்ந்து நேசித்த வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! தாய்நாட்டின் மீது கொண்ட நேசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து, இந்திய மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர் நேதாஜியின் தீரத்தையும் தியாகங்களையும் வணங்கிடுவோம்.