தலைமைக் கழக அறிவிப்பு தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.VP.குமரேசன், கழக அமைப்பு செயலாளர் திரு.P.R.மனோகரன், கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி, தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் திரு.M.ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.