கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி நாளிதழில் பணியாற்றியவருமான திரு.ஐ.சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. திரு.ஐ.சண்முகநாதன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றியக் கழகம் மற்றும் ஆழ்வார் திருநகரி பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கான நடுநிலை செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாளில், உலக நாடுகளை செய்திகள் மூலம் இணைக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பேணி காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.குமார் அவர்கள், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது. மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதோடு, மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கோடை கால வெயில் தாக்கத்திலிருந்து பறவைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் – வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு தீவிர வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தை மனிதர்களே சமாளிக்க முடியாத நிலையில், வனப்பகுதிகளிலும், சரணாலாயங்களிலும் வாழ்ந்து வரும் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தங்களின் உணவு மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும் வறண்டு போய் இருப்பதாலும், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலும், போதுமான தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களில் வனத்துறை சார்பாக சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து, அதில் போதுமான அளவு தண்ணீரை தேக்கிவைத்து, கோடைவெயிலில் சிக்கித் தவிக்கும் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும். கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படாது என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியையும் மீறி தற்போது நடைபெறும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும். எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத பேருந்து பயணங்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? பராமரிப்பற்ற அரசுப் பேருந்துகளின் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் வழியில் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்றின் கதவு திடீரென கழன்று விழுந்ததில் அதில் பயணித்த பெண் பயணி காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கையுடன் சாலையில் தூக்கிவீசப்பட்ட நடத்துனர், சென்னையில் மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே ஏற்பட்ட ஓட்டையில் கீழே விழுந்து பெண் பயணி படுகாயம் என முறையான பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளும், அதனால் ஏற்படும் தொடர் விபத்துக்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும் அறிவிப்பை செயல்படுத்த முன்வராத திமுக அரசு, காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை மற்றும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
Previous
Next
காணொளி
TTVDhinakaran | பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் | AMMK |
TTVDhinakaran | கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 01.05.2024
TTVDhinakaran | வீரபாண்டி திரு.எஸ்.கே.செல்வம் அவர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெற வேண்டும்
TTVDhinakaran | உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்கள் | AMMK
மாவட்டக் கழக செயலாளர் தேர்போகி V.பாண்டி அவர்களின் தந்தை மறைவிற்கு பொதுச்செயலாளர் அவரகள் அஞ்சலி
திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவு வைத்துள்ளார் – பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள்
கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 21.04.2024
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு – மதுரை -21-04-2024
மேலும் பார்க்க
புகைப்படங்கள்
homepage \ புகைப்படங்கள்
கழக பொதுக்குழு கூட்டம்-2023
மேலும் பார்க்க
பத்திரிகை வெளியீடுகள்
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி நாளிதழில் பணியாற்றியவருமான த…
May 3, 2024
தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றியக் கழகம் மற்றும் ஆழ்வார் திருநகரி பேரூர்…
May 3, 2024
அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி மக்கள…
May 3, 2024
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், நடுமுதலைகுளம் ஊராட்சிக் கழக ச…
May 3, 2024
துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள்…
May 3, 2024
கோடை கால வெயில் தாக்கத்திலிருந்து பறவைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் – வனப்பகுதிகளில் …
May 2, 2024
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் –…
May 2, 2024
காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத பேருந்து பயணங்களும் தான் …
May 1, 2024
விருதுநகர் அருகே ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்ப…
May 1, 2024
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று தடுப்புச்சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்…
May 1, 2024
கழகப் பொருளாளர் வீரபாண்டி திரு.எஸ்.கே. செல்வம் அவர்களின் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய…
May 1, 2024
இரங்கல் செய்தி:தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை மேற்கு பகுதி, இதயதெய்வம் அம்மா பேரவை செயலா…
April 30, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் நிகழும் குளறுபடிகள் களையப்பட வேண்டும் – …
April 30, 2024
உழைக்கும் மக்களின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினத்தை உரிமையோடு கொண்டாடி மக…
April 30, 2024
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் – மாநிலத்தின்…
April 29, 2024
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தூய்மைப்பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவல நிலை – …
April 28, 2024
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டக் கழக செயலாளர் திரு.தேர்போகி V.பாண்டி அவர்களின் தந்தை த…
April 28, 2024
திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுத…
April 27, 2024
தலைமைக்கழகஅறிவிப்பு: கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மே தி…
April 26, 2024
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ப…
April 25, 2024
இரங்கல் செய்தி:திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு. R.பக்தவத்சலம் அ…
April 25, 2024
இரங்கல் செய்தி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர…
April 25, 2024
இரங்கல் செய்தி:திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.மா.கி.வரதராஜன் அவர்களின் தாயார் திருமத…
April 25, 2024
இரங்கல் செய்தி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜக்கமங்கலம் ஒன்றியம், ஆத்திகாட்டுவிளை ஊராட்சிக் க…
April 23, 2024
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்ட…
April 23, 2024
எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும்,
[…]
கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் ப…
April 22, 2024
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக…
April 22, 2024
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கு…
April 21, 2024
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர…
April 20, 2024
வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்; நமக்கு எதிரானவர்களுக்…
April 18, 2024
I thank the Hon’ble prime minister Narendra Modi Ji for your heartfelt wishes and blessings. …
April 17, 2024
ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து விடுதலை வேட்கையுடன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்க…
April 17, 2024
நாடாளுமன்ற மக்களவையில் இதயதெய்வம் அம்மா அவர்களின் குரலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரலை ஒல…
April 16, 2024
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய…
April 14, 2024
மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்…
April 14, 2024
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்…
April 13, 2024
சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அ…
April 13, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் …
April 12, 2024
இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.N.சிவக்குமார் அவர்கள் உடல்நலக் குறைவால் இய…
April 12, 2024
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரக் கழக செயலாளர் திரு.V.M.பாண்டியராஜன் அவர்களின் தாயார் த…
April 10, 2024
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மன…
April 10, 2024
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்…
April 9, 2024
திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் திரு.K.சொக்கா் அவர்களின் மகனும், மா…
April 9, 2024
யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்…
April 8, 2024
நவீன வேளாண்மைக்கு வசப்பட்டிருந்த தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, தன் வாழ்நாள் முழுவதும…
April 6, 2024
இரங்கல் செய்தி – தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
April 5, 2024
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக ஆ…
April 4, 2024
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைத்தலைவராக திரு.M.கோமுகி மணியன் அவர்கள் நியமனம்
April 3, 2024
குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் ச…
April 3, 2024
FORMAT C-2 : DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY
March 31, 2024
அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடி மகி…
March 31, 2024
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிர…
March 29, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் _2024 | கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகர…
March 28, 2024
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்…
March 26, 2024
வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை…
March 25, 2024
Form C7 – Information regarding individuals with pending Criminal Cases, who have been select…
March 25, 2024
தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்…
March 24, 2024
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் (NDA) செயல்வீரர்கள்-வீராங்கனைகள…
March 23, 2024
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அர…
March 23, 2024
இரங்கல் செய்தி:தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் திரு.K.சாமிநாதன் அவர்களின் மனைவ…
March 23, 2024
மேலும் பார்க்க
தமிழகம் தலைநிமிரட்டும்
தமிழர் வாழ்வு மலரட்டும்
சமூக ஊடகம்
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
AMMK's - Facebook
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2022 AMMK. All Rights Reserved.